நான்காவது முறையாக ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இந்த நிலையில், நான்காவது முறையாக ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார், தமிழக துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.